முகப்பு
தமிழ்நாடு

காந்தி, காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
மு.க.ஸ்டாலின்.
பகிர்:

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனத சுட்டுரையில், அக்டோபர் 2 - உலக உத்தமர் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள்! 

அடிமை இந்தியாவில் சுதந்திரக் காற்றை வீசச் செய்த தேசத் தந்தை!

அவர் காண விரும்பிய சமத்துவ சமூகம் - சமூக நல்லிணக்க சமுதாயம் - அனைவருக்குமான நாடு ஆகியவற்றை அமைக்கப் போராடுவோம்!

கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார். கிராமம் காக்க, வேளாண்மை செழிக்க, விவசாயி வாழ நம்மை நாமே அர்ப்பணிப்போம்!

வாழ்க எம்மான்!

அதேபோல், அக்டோபர் 2 - கர்ம வீரர், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள்!

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவும், தமிழகம் உரிமையோடு திகழவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிப்பெரும் தலைவர் அவர். 

ஏழைகள் ஏற்றம் பெறவும் - எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவும் - உலகில் தமிழன் உயர்ந்து நிற்கவும் - பெருந்தலைவர் விரும்பினார். 

அவர் விருப்பத்தை நம் கடமையாகக் கொண்டு உழைப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →