ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுகிறார்.
தமிழ்நாடுஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுகிறார்.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதற்கு பின்பு, தமிழக முதல்வர் பழனிசாமி ஆறாவது முறையாக, ஆளுநரை சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
அதேவேளையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.