சங்ககிரியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை அறிவித்ததையடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மேளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், இனிப்
சங்ககிரி: அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை அறிவித்ததையடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மேளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
அதிமுக தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை அறிவிப்பு செய்ததையடுத்து சேலம் மாவட்டம்,சங்ககிரி அதிமுக நிர்வாகிகள் சென்னை சென்று முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலர் என்சிஆர் ரத்தினம் தலைமையில் வியாழக்கிழமை பட்டாசுகள்வெடிக்க குழுமியிருந்த அதிமுகவினர்.
சென்னையிலிருந்து வியாழக்கிழமை சங்ககிரி திரும்பிய அதிமுகவினர் சங்ககிரி ஒன்றியச் செயலர் என்சிஆர்.ரத்தினம் தலைமையில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மேளங்கள் முழங்க, முதல்வர் வாழ்க என முழங்கியவாறு பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உள்பட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
சங்ககிரி நிர்வாகிகள் மருதாஜலம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சி.செல்வம், நாரணப்பன்சாவடி சேகர், முன்னாள் தொகுதிகழகச் செயலர் வி.ஆர்.ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மாதையன், சின்னாகவுண்டனூர் கருப்புசாமி, நிர்வாகிகள் சிவமுருகன், ஏடிசி மோகன், முத்துகுமார், ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.