முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
Chance of moderate rain in 5 districts including Kanyakumari in Tamil Nadu
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடம்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் தேனி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடம். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

ராஜபாளையம் 8 செ.மீ மழையும், ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம், மணிமுத்தாறு தலா 4 செ.மீ மழையும், வீரபாண்டி, கோவிலான்குளம், பிளவக்கல், மேல் பவானி தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →