தமிழ்நாடு

கரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

DIN

சென்னை: கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து காணொலி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புதன்கிழமை கேட்டறிந்தார்.
நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொண்டு வருவதாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அப்போது பாராட்டு தெரிவித்தார்.
இந்தக் காணொலி ஆய்வில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சுகாதார உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT