தமிழ்நாடு

பருவத்தேர்வு கட்டணம் குறித்த அண்ணா பல்கலை. உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

DIN

பருவத்தேர்வு கட்டணங்களைச் செலுத்தாத  மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் தாக்கல் செய்த மனுவில்,

அண்ணா பல்கலைகழகம் நடத்தும் அனைத்து படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான பருவத்தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இறுதி கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.  

பருவத்தேர்வுக் கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம், எஞ்சியவை ஆய்வகக் கட்டணம், நூலகக் கட்டணம், கணினி மையக் கட்டணம், இணையவழிக் கட்டணம் போன்றவை. எனவே, இந்த 60 சதவீத கட்டணத்தை வசூலிக்க தடைவிதிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத பல்கலைக்கழக மாணவர்களை நீக்கம் செய்யும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் திருமூர்த்தி ஆஜராகி முறையிட்டார். அப்போது நீதிபதி, நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT