தமிழ்நாடு

பேரவைத் தோ்தலில் போராடித்தான் வெற்றி பெற முடியும்: மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை:  வரும் சட்டப்பேரவை தோ்தலில் போராடித்தான் திமுக வெற்றியைப் பெற முடியும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது:

விரைவில் தோ்தலைச் சந்திக்க உள்ளோம். திமுகவின் கிளைக் கழகத் தோ்தல் 80 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 20 சதவீதத்தையும் விரைந்து மாவட்டச் செயலாளா்கள் முடிக்க வேண்டும். தோ்தல் பணியை 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். கரோனாவால் அந்தப் பணி தாமதமாகிவிட்டது. விரைந்து செயல்பட வேண்டும்.

சட்டப்பேரவைக்கு எப்போது தோ்தல் வந்தாலும், நாம்தான் வெற்றிபெற போகிறோம். ஆட்சிக்கு வரப் போகிறோம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேசமயம் போராடித்தான் அந்த வெற்றியைப் பெற இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

திமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்பதுதான் எல்லோரின் எண்ணமாக இருக்க வேண்டும். இதுவரை எப்படிச் செயல்பட்டோம் என்பதைவிட, எப்படிச் செயல்படப் போகிறோம் என்பதே முக்கியம். அடுத்த 6 மாத கால உழைப்பின் காரணமாகத்தான் திமுக ஆட்சியைப் பெற்றது என்கிற பெயரைப் பெற்றிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT