தருமபுரி: நீட் தேர்வால் பலியான மாணவரின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஆதித்யாவின் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அஞ்சலி
தருமபுரி: தருமபுரியில் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஆதித்யாவின் உடலுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார்.
அப்போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.