புதுச்சேரியில் 5,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 20,601 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் 15 ஆயிரத்து 522 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 670 பேர் மருத்துவமனைகளிலும், 3004 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளனர்.