முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,652 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 6:15 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM


தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 983 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் 57 பேர் (அரசு மருத்துவமனை -34, தனியார் மருத்துவமனை -23) பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் மேலும் பேர் 5,768 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,64,668 பேர் குணமடைந்துள்ளனர். 46,633 பேர் (தனிமையில் உள்ளவர்கள் உள்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 84,567 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 61,33,399 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.