கம்பத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் சாலை மறியல்
தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை இரவு இந்திய தேசிய லீக் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை இரவு இந்திய தேசிய லீக் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழனி அருகே ஆயக்குடியில் பழனிபாபா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாஜக சார்பில் கொடியேற்றப்பட்டது.
இதை கண்டித்து வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு கம்பம் கம்பமெட்டு ரோடு சந்திப்பில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் முகமது சாதிக் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தகவல் கிடைத்ததும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே. சிலைமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.