தமிழ்நாடு

புதுச்சேரியில் கரோனா உயிரிழப்பு 500 ஆக உயர்ந்தது

DIN

 
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் சனிக்கிழமை 5,032 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 439 பேரும், காரைக்காலில் 61 பேரும், ஏனாமில் 21 பேரும், மாஹேவில் 14 பேரும் என மொத்தம்  555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,032 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 1,875 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 ,452 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 (1.92சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,205 (77.62சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT