முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் சீல் வைக்கப்பட்ட 70 இடங்களில் கடைகளை திறக்கத் தடை

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட 70 இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2020 at 3:09 PM
பகிர்:

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட 70 இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 70 இடங்களில் சீல் வைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சுற்றி 3.கி.மீ. தொலைவிற்கு எந்தக் கடைகளையும் திறக்கக் கூடாது என்றும் அப்பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் என்றும்  சேலம் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா பாதித்தவரோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழகத்தில், 969 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் 14 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.