கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது: தமிழக அரசு
ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த காலக் கட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் 2020 - 21க்கான கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.