சென்னையில் 2,712 பேர் கரோனாவுக்குப் பலி: மண்டலவாரியாக விவரம்
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,653 ஆக உள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,653 ஆக உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு சற்றே குறைந்து வருகிறது.
சென்னையில் இதுவரை 1,33,173 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். 1,16,808 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோடம்பாக்கத்தில் 1,577 பேரும், அண்ணா நகரில் 1,621 பேரும், அம்பத்தூரில் 1,087 பேரும், அடையாறில் 1,327 பேரும், வளசரவாக்கத்தில் 1,051 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.