முகப்பு
தமிழ்நாடு

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Updated On : 7 ஜனவரி 2021, 3:44 am IST
பகிர்:

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து,  அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 
ஆனால், பேரருவியில் இரண்டாவது  நாளும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை பேரருவியில் தண்ணீரின் சீற்றம் குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.