தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு
தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு
தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நிலவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அறிவித்து வருகிறார்.
அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவிகித வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை 55.31 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.