சதாம் ஹுசேன் பாணியில் மீன் குழம்பில் தாலியம் கலந்து கொடுத்த கொடூரன் 
தமிழ்நாடு

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது 

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். 

DIN

சிதம்பரம்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். 

சிதம்பரம் ஆரணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரபிரபு (36) இவர் பகுஜன் சமாஜ் கட்சி சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராகவும், அக்கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

புதன்கிழமை இரவு தேர்தல் பணிகளை முடித்து விட்டு சந்திரபிரபு சிதம்பரம் புறவழி சாலையில் இந்தியன் கேஸ் குடோன் வழியாக தனது வீட்டிற்கு செல்லும்போது அந்த வழியாக வந்த நபர் சந்திரபிரபுவை வழிமறித்து நிறுத்தி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார். 

இதனையடுத்து சந்திரபிரபு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் அடிப்படையில் சிதம்பரம் சகஜானந்தா தெருவைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பது தெரியவந்தது. 

இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்!

பிபிஎல் தொடரில் அவமதிக்கப்படும் பாகிஸ்தான் வீரர்கள்? புலம்பும் ரசிகர்கள்!

இந்தியா - வங்கதேச மோதல்! யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க கேப்டன்கள் மறுப்பு!!

27 நட்சத்திர விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை: திரளானோர் பங்கேற்பு!

கவினின் புதிய படத்தில் இணைந்த சாண்டி!

SCROLL FOR NEXT