அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடுஅரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் திட்டத்தை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் இன்று, தமிழகத்தில் கரோனாவால் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது.
அரசு அலுவலர்கள் தினந்தோறும் பணிக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கரோனாவின் தீவிரத்தை அறிந்து மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.