சங்ககிரி வீர ஆஞ்சனேயர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்
தமிழ்ப் புத்தாண்டினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் கிரிகாலனியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி: தமிழ்ப் புத்தாண்டினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் கிரிகாலனியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் பிலவ புத்தாண்டினையொட்டி அருள்மிகு வீர ஆஞ்சனேயர், ராமர், சீதாதேவி, லட்சுமணன் சுவாமிகள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சுவாமிகளுக்கு அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன.
அதனையடுத்து காசி விசாலாட்சி அம்மன் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக பெருமாள் திருப்பள்ளி எழுச்சி, ஆஞ்சநேயர், அம்மன் - சுவாமி உள்பட பல்வேறு சுவாமிகளின் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. சங்ககிரி நகர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர்.