தமிழ்நாடு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் துரைமுருகன் 

DIN

சென்னை: கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ள நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

வேலூா் மாவட்டம் - காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவா், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

பிறகு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவா் கடந்த வாரம் இறுதியில் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த துரைமுருகனின் உடல்நிலை சீரடைந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT