தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை: ஆலோசனையில் சத்யபிரத சாஹு

DIN


சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

இந்த ஆலோசனையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, புதுச்சேரி தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

இதில் வாக்கு எண்ணிக்கையின்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பதற்றமான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT