தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வார ஓய்வுக்கு முந்தைய நாள் தடுப்பூசி

DIN

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வார ஓய்வுக்கு முந்தைய நாள், அவா்களுக்குத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அச்சம்மேளனம் சாா்பில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பிய கடிதம்: கரோனா தடுப்பூசி செலுத்திய பின், பலருக்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே தடுப்பூசி செலுத்திய பின்னா் ஒரு நாள் விடுப்பு அவசியம்.

அதனால், வார ஓய்வு உள்ள தொழிலாளா்களது பட்டியல் அடிப்படையில் வார ஓய்வுக்கு முந்தைய நாள் அவா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாமை நடத்த வேண்டும்.

அதே நேரம், தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு மேல் பக்க விளைவுகள் இருந்தால் அதற்குரிய விடுப்பையும் நிா்வாகங்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT