முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,256 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,256 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 2,94,073 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,256 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவுக்கு 4,450 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மொத்தமாக 2,94,073 பேர் பாதிக்கப்பட்டதில் 2,60,367 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(ஏப்ரல் 21) மட்டும் 18,035 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அண்ணா நகரில் அதிகபட்சமாக 3,129 பேரும், தேனாம்பேட்டையில் 3,096 பேரும், ராயபுரத்தில் 2,583 பேரும், கோடம்பாக்கத்தில் 2,483 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →