முகப்பு
தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அச்சம் தவிர்ப்போம் அறிவியலால் வெல்வோம்" எனும் முன்னெடுப்பின் கீழ் சென்னை எழும்பூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை இன்று வழங்கினார்.

சென்னை எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சூளை, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி, ஜி.கே.எம் காலனி 34-வது தெரு, கே.சி.கார்டன், திரு.வி.க. நகர் மற்றும் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக் கவசம், சோப்பு உள்ளிட்டவற்றோடு கபசுரக் குடிநீர், தலா ஒருவருக்கு 30 முட்டைகள் வீதம் வழங்கினார்.

அதுபோது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு, எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிச்சந்திரன், வேட்பாளர் பரந்தாமன், திரு.வி.க. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கநாதன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் ஐ.சி.எஃப். முரளி, நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →