வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழ்நாடுவழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு, திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.பு திதாககுடமுழுக்கு, திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.