இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றம்: சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து
இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடுஇஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றம்: சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து
இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கு வரும் 18 விமானங்கள், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபை, அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்தாகியுள்ளன.
3ஆவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.
ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால் வளைகுடா நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.