முழு ஊரடங்கு: வெறிச்சோடிய பெரியகுளம்
முழு ஊரடங்கு உத்தரவால் இன்று பெரியகுளம் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு உத்தரவால் இன்று பெரியகுளம் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருதையடுத்து தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து பெரியகுளம் நகர்ப் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது.