தமிழ்நாடு

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற தேர்தல் அலுவலர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மூடி வைத்தார்.

இந்நிலையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன் வெற்றி பெற்றதை அடுத்து  செவ்வாய்க்கிழமை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டி சந்தை திடலில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் குத்துவிளக்கு ஏற்றினர். 

இதில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன், நகர செயலாளர் பூமா ராஜா, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் துரைராஜன், பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் முருகன்ஜி, ஒன்றியச் செயலாளர்கள் எம்.வி.பி. ராஜா, பிச்சை ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் டிஆர் பால்பாண்டி, செல்லம்பட்டி அவைத்தலைவர் பண்பாளன், மற்றும் ஒன்றிய நகர அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT