முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை மட்டும் 1,55,965 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,949 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,67,401.

மேலும் 2,011 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 25,13,087 பேர் குணமடைந்துள்ளனர். 34,197 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 20,117 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

அதிகபட்சமாக கோவையில் 226 பேரும், சென்னையில் 189 பேரும், ஈரோட்டில் 154 பேரும், செங்கல்பட்டில் 114 பேரும், தஞ்சாவூரில் 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.