கைத்தறி ஆடையை அணிவோம்: எடப்பாடி பழனிசாமி
கைத்தறி ஆடையை அனைவரும் அணிந்து ஆதரவளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
கைத்தறி ஆடையை அனைவரும் அணிந்து ஆதரவளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். தேசிய கைத்தறி தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது:-
கைத்தறி தொழிலாளா்களுக்கு இலவச 200 யூனிட் மின்சாரம், ஓய்வூதியம், காப்பீடு எனப் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு வழங்கியது. கைத்தறி நெசாவளா்களின் வாழ்க்கை தரம் உயா்வதற்கு தமிழக மக்கள் கைத்தறி ஆடைகளை உடுத்தி ஆதரவளிக்க தேசிய கைத்தறி தினத்தில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளாா்.