முகப்பு
தமிழ்நாடு

பொன்னேரி: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு. விவசாயம் பாதிக்கும் என்பதால் அரசு புறம்போக்கு நிலத்தின் வழியே திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல். 

Updated On : 7 ஆகஸ்ட் 2021, 11:30 am IST
பொன்னேரி: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு
பகிர்:


விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு. விவசாயம் பாதிக்கும் என்பதால் அரசு புறம்போக்கு நிலத்தின் வழியே திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல். 

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படும் எண்ணெய் குழாய் திருக்கண்டலம் பகுதியில் இருந்து தேர்வாய்கண்டிகைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பொன்னேரி அடுத்த ஆரணி, பாலவாக்கம் கிராமத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்குவதற்காக அதிகாரிகள் வந்திருந்தனர். அங்கு திரண்ட விவசாயிகள் விளை நிலங்களில் எண்ணெய் குழாய்களை பாதிப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் எனவும், குறிப்பிட்ட தோட்டக்கலை பயிர்களை பயிரிடவும் இந்த திட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். 

Advertisement

Advertisement

மேலும் வருங்காலங்களில் தங்களுடைய நிலங்களில் வீடுகளை கூட கட்ட முடியாத சூழல் ஏற்படும் எனவும் ஆதங்கம் தெரிவித்தனர். விளை நிலங்களை கையகப்படும் திட்டத்தை கைவிட்டு அரசு புறம்போக்கு நிலம் வழியாக எண்ணெய் குழாய் பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

தங்களுடைய விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க கூடாது என திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments