சிறுவாபுரி கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் தரிசனம் ரத்து 
தமிழ்நாடு

சிறுவாபுரி கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் தரிசனம் ரத்து

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை அருகே ஆரணி அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரியில்  பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது.

DIN

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை அருகே ஆரணி அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரியில்  பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோயிக்கு வந்து விளக்கேற்றி ஆறு வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் வீடு வாங்குதல், திருமணம், நிலம் சம்பந்தமான தடை உள்ளிட்டவைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செவ்வாய்கிழமையில் முருகனை வழிபட வருவர். இதனால் கூட்டம் அலைமோதும்.

தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க 10.08.2021 முதல் செவ்வாய்க்கிழமைகளில் பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், பக்தர்கள் இனிவரும் நாளில் செவ்வாய்க்கிழமையில் முருகர் கோவிலுக்கு வருவது தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026-27: நிர்மலா சீதாராமனின் 83 நிமிட முழு உரை

மத்திய பட்ஜெட் 2026-27: தமிழ்நாட்டிற்கு கிடைத்த திட்டங்கள் என்ன?

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி; இதை கவனித்தீர்களா?

யு19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா! பாகிஸ்தானை வெளியேற்றியது!

111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. தோல்வி; டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய பாகிஸ்தான்!

SCROLL FOR NEXT