தமிழ்நாடு

மீன்வளத்துறை அமைச்சர் சகோதரர் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

DIN


தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணம் திருடிச் செல்லப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் டாக்டர். சுதானந்தன். இவருக்கு தூத்துக்குடிகேடிசி நகரில் சொந்தமான வீடு உள்ளது. 

அந்த வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள், பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொள்ளையர்கள் திருடிச் சென்ற பணம் மற்றும் நகைகள் விவரம் முழுமையாக தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர். 

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.  ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT