கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்தும் வகையில் 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " தீயணைப்புதுறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். காவல்துறையில் உள்ள 14,317 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தீயணைப்பு சட்டம் முழுவதுமாக மாற்றியமைக்கப்படும்" என்றார்.

காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், "500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சுழல் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். ஈர நிலங்கள் சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT