தமிழ்நாடு

பவானிசாகர் அணையிலிருந்து ஆக.15 முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஆக.15 முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

DIN

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஆக.15 முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு 15.08.2021 முதல் 12.12.2021 முடிய 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. 
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT