10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.
உழவர் சந்தைகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில்,
உழவர் சந்தையில் வெளி மார்க்கெட் விலை மற்றும் உழவர் சந்தை விலை அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்படும்.
காய்கறி கழிவுகளில் தயாரிக்கப்படும் உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும்.
ரூ.10 ஆயிரம் மானியம்
மின்மோட்டார், பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
50 ஊழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.
மேலும் பார்க்க.. வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்
உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடியில் செயல்படுத்தப்படும்.
கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.