முகப்பு
தமிழ்நாடு

'7.5% இட ஒதுக்கீடு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும்' 

7.5% இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு கோரிக்கை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:


7.5% இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில், 

மருத்துவ, பொறியியல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் உதவி பெறும் மாணவர்களுக்கு வாய்ப்பளித்து சம நீதி வழங்கிட வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி இணை பிரிவினை இடையூறின்றி செயல்படுத்திட வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

நிறுத்திவைக்கப்பட்டுள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் மற்றும் அகவிலைப்படி உயர்வுகள் விரைவாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்வைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →