தமிழகத்தில் மத அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம்: ஹிந்து முன்னேற்றக் கழகம்
தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம் என ஹிந்து முன்னேற்றக்கழக மாநில தலைவர் வழக்குரைஞர் கோபிநாத் தெரிவித்தார்.
சிதம்பரம்: தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம் என ஹிந்து முன்னேற்றக்கழக மாநில தலைவர் வழக்குரைஞர் கோபிநாத் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை வருகை தந்த ஹிந்து முன்னேற்றக்கழக மாநில தலைவர் வழக்குரைஞர் கோபிநாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகஅரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அறிவித்திருப்பது மிகவும் தவறு. அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்ட எந்த தலைவர்களுமே இந்துத்துவாவின் ஆகம விதிகளில் தலையிட்டதில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சொல்லி ஆகம விதிகளில் தேவையில்லாமல் தலையிடுகிறார்.
Advertisement
Advertisement
ஹிந்து முன்னேற்றக்கழகம் சார்பாக தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் ஏற்கனவே தில்லைநடராஜர் கோயில் கைவைத்து என்ன நடந்தது என்றும், கோயிலை தீட்சிதர்களே நடத்தலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றும் தெரியும்.
எனவே மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம். இந்துக்கள் மிரண்டால் நாடு கொள்ளாது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தையும் முதலில் தூய்மைபடுத்துங்கள் குடமுழுக்கு செய்யுங்கள். அதனைவிட்டு நிலங்களை மீட்க வேண்டும் என்று மாயையை ஏற்படுத்தி இந்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.
ஹிந்துக்கள் கோயில்களை சொத்துகளை அறநிலையத்துறை கண்காணித்து வழிநடத்துகிறதோ. அதே போல் இஸ்லாமிய ஜமாத், கிருஸ்துவ சபைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லையென்றால் ஹிந்து கோயில்கள் அனைத்தையும் ஹிந்துக்களிடையே ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது இந்துக்களுக்கு ஆதரவான ஆட்சி இல்லை என கோபிநாத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.