மதுரையில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விபத்து: ஒருவர் பலி
மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மதுரையில் நத்தம் சாலையில் புதிதாகப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாலம் இடிந்து விழுந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.