தமிழ்நாடு

டிசம்பர் 4 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

DIN

அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, 

டிசம்பர் 4ஆம் தேதி மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், டிசம்பர் 5ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகே, இதன் பாதையை துல்லியமாகக் கணிக்க முடியும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடலோர ஆந்திர மாவட்டங்கள் மற்றும் கடலோர தெற்கு ஒடிசா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். 

இது புயலாக உருவானதும் இதற்கு ஜாவத் என்று பெயரிடப்படும். இது டிசம்பர் 4ஆம் தேதி காலை வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, வியாழக்கிழமை மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடற்கரையை நோக்கி டிசம்பா் 4-ஆம்தேதி காலை நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT