முகப்பு
தமிழ்நாடு

‘பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும்’: தேமுதிக

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
தேமுதிக தலைமை அலுவலகம்
பகிர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை முதல் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோரை 15 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →