முகப்பு
தமிழ்நாடு

வெளிமாநில விமான பயணிகள் தமிழகத்திற்குள் வர இ-பதிவு கட்டாயம்

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
கோப்புப்படம்
பகிர்:

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் பாதிப்பு பதிவாகியுள்ளது. மேலும், சிலருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு இன்று அறிவித்துள்ள கூடுதல் கட்டுப்பாட்டில்,

  • வெளி மாநிலங்களிலிருந்து விமானத்தில் தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட வரும் பயணிகள் இ-பதிவு செய்திருப்பது கட்டாயம்.
  • விமானங்களில் தமிழகம் வருவோர் இரண்டு தவணை தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுத்த கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • வெளி மாநில பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்.
முழு கட்டுரையைப் படிக்க →