முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 605 பேரில் தன்சானியாவிலிருந்து வந்தவர்கள் 2 பேர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பியவர்கள் 2 பேர். இதுதவிர வங்கதேசத்திலிருந்து திரும்பிய ஒருவருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து திரும்பிய ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,44,642 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 663 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,01,336 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,744 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 6,562 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 172
கோவை - 88
செங்கல்பட்டு - 50 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.