ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சென்னையில் எந்தெந்த சுரங்கப் பாதைகள் மூடல்? போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

DIN

சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னை துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதையடுத்து, 4 சுரங்கப்பாதைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்திற்கு தடை விதித்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்! டிடிவி தினகரன்

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

SCROLL FOR NEXT