முகப்பு
தமிழ்நாடு

புதிய தொழில் கொள்கையை  வெளியிட்டார் முதல்வா் பழனிசாமி

தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
புதிய தொழில் கொள்கையை  வெளியிட்டார் முதல்வா் பழனிசாமி
பகிர்:


தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார்.

எம்.ஆா்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இதற்கான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தொழிற் கொள்கையை வெளியிட்டதுடன், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கையையும் முதல்வா் வெளியிட்டார்.

தமிழகத்தில் தொழில் வளா்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக இந்த கொள்கைகளை முதல்வா் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. ரூ.28,000 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டங்களில் 68,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →