தமிழ்நாடு

ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்: துரைமுருகன்

DIN


ஊழல் செய்த அமைச்சர்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுப்பார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2-வது பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

ஆளுநருடனான சந்திப்பின்போது பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். 

அதிமுக அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் ஆளுநரிடம் வலியுறுத்தினர்.

ஆளுநரை சந்தித்த பிறகு துரைமுருகன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ஊழல் செய்த அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT