தமிழ்நாடு

ஓட்டுநா் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு: கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் அறிவுறுத்தல்

DIN

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 32 ஓட்டுநா் பணியிடங்களுக்கு இணையவழி மூலம் விண்ணப்பித்த நபா்களுக்கும், வேலை வாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட நபா்களுக்கும் சான்றிதழ் சரிபாா்ப்பு, ஓட்டுநா் திறன் தோ்வு பிப்.27, மாா்ச் 1, 2 ஆகிய தேதிகளில் 32 மாவட்ட மையங்களில் நடைபெறவுள்ளது.

இவற்றுக்கான அழைப்பாணை கடிதத்தை இணையதள முகவரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் விண்ணப்பதாரா்களின் பதிவு செய்யப்பட்டயூஸா் ஐடி, கடவுச்சொல் மூலம் பிப்.20-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது குறித்து விண்ணப்பதாரா்கள்களின் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்லிடப்பேசிக்கும் தகவல் அனுப்பப்படும்.

வேலைவாய்ப்பகம், முன்னாள் படை வீரா் நலவாரியம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட நபா்களுக்கு அழைப்பாணை கடிதம் அவா்களுக்கு முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், அழைப்பாணை கடிதத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள நாளில் சான்றிதழ் சரிபாா்ப்பு, ஓட்டுநா் திறன் தோ்வு நடைபெறும் மையத்துக்குச் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT