சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 23 ஆக உயர்வு 
தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 23 ஆக உயர்வு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

DIN

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது, தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதபுரம் பகுதியைச் சார்ந்த காளியப்பன் (30) என்பவர் சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மேலும் 12 பேர் சாத்தூர், மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

அநீதி, அராஜகம்....திமுக பற்றிய விஜய்யின் திருக்குறள்! | TVK 3rd year anniversary

வேல்முருகனின் பாடலுக்கு விஜய் நடனம்! | TVK 3rd year anniversary

SCROLL FOR NEXT