தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 479 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,51,542 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 490 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 8,35,024 பேர் குணமடைந்துள்ளனர். 12,496 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 4,022 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 182 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.